காத்திருப்பேன்
மரணம் என்னை அழைக்க,
என் உள்ளம்
உன்னையே அழைக்கிறது.
இருக்கும்பொழுது
ஒரு குவளைத் தண்ணீராவது
உன் கையாள்
பருக ஆசைப்பட்டேன்,
நிறைவேற காலம்
கைகூடவில்லை - காத்திருப்பேன்..
நான் இறக்கும்
வேளையிலாவது - நீ
ஊற்றும் ஒரு சொட்டுப்
பாலுக்காக காத்திருப்பேன்,
என் ஆசையை
நிறைவேற்றும் உனக்காக!...
MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...
0 comments:
Post a Comment