கண்தேடுதே...
உன்னைக் காணாத
நாளெல்லாம்
இருளாய்ப் போகுதடி - என்
வாழ்க்கையில்.
தனிமையில் இருக்கும்போதும்
என்னோடு - நீ
இருக்கிறாய் என்று
என் மனம் சொல்ல
கண்கள் உனைத் தேடுதடி..
கூட்டத்தில் கூட்டமாய்
இருக்கும் தருணத்திலும்
உன் வாசம் எனைச் சூழ
என்னையே மறந்து
என் கண்கள்
உனைத் தேடுதடி...
MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...
0 comments:
Post a Comment