"நிலவே"
பூமியிலுள்ள கயவர்கள்
சோதனை என்ற பெயரில்
அணுகுண்டை ஏவி - உன்
உயிரைப் பறித்திடுவார்கள்
என்று எண்ணியே,
விலகியே நிற்கிறாயோ!...
இந்தியாவை,
அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள்
உன்னையும் அடிமையில்
ஆழ்த்திடுவார்கள்
என்று எண்ணியே,
விலகியே நிற்கிறாயோ!...
MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...
0 comments:
Post a Comment