வானவில்
வானவில்லே!
மழைக்காலத்தில் மட்டும்
வெளியே வருகிறாயே?
பொறாமையாள்
சூரியன் - உன்னை
சுட்டுவிடுவான்
என்பதாலோ!
வானவில்லே!
பகலில் மட்டும்
தோன்றுகிறாயே?
நிலவானவன் - உன்
வண்ணங்களை
திருடிடுவான்
என்பதாலோ!!
வானவில்லே!
சில தருணத்தில் - உன்
வண்ணங்கள் யாவும்
மங்களாய்
காட்சியளிக்கிறதே?
சேலைக்கு
வண்ணம் பூச்ச,
உன்மேல்
ஒத்தி ஒத்தியே
எடுத்துவிட்டார்கள்
என்பதாலோ!!!
வானவில்லே!
எப்போதும் வளைந்தே
தென்படுகிறாயே?
மாசு படிந்த
இந்த உலக
உருண்டையை
உனது வண்ணத்தை
ஊற்றி கழுவுவதற்காக,
தூக்கிச் செல்ல
வளைந்து கொடுக்கிறாயா
கைப்பிடியாக...
MG.சில்வர்ஸ்டார் சிபி விண்னரசன்...
0 comments:
Post a Comment